பிரான்சு நகரமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர்கள் !
பிரான்சில் நடந்து முடிந்த நகரமன்ற தேர்தலில் பிரான்சு வாழ் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் போட்டியிட்டுள்ளனர்.
பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகரமன்ற தேர்தல் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. உலகப் பெருந்தொற்றான கோவிட் 19 (கொரோனா) நேரத்திலும் தொடர்ந்து இரண்டாம் சுற்றுக்கான தேர்தல் ஜூன் மாதம் 28 ஆம் தேதி நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் பல தமிழர்கள் வேட்பாளர்களாக நகரமன்ற பதவிகளில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.