ஏழு தமிழர் விடுதலைக்கான பேரணி: அண்மைப் புகைப்படங்கள்
சென்னையில் நடைபெறும் ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் ஒருங்கிணைத்துள்ள ஏழுதமிழர் விடுதலைக்கான பேரணி தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதன் அண்மைப் புகைப்படங்கள்களத்திலிருந்து இதில் பல எழுத்தாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், கட்சியினர், தமிழ் அமைப்பினர் கூட்டாக கலந்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்தேசியம்
நிகழ்வுகள்
சென்னை வள்ளுவர் கோட்டம் தெரியும், மலேசியாவின் வள்ளுவர் கோட்டம் தெரியுமா?
பத்துமலையில் முருகன் கோவில் பிரபலம். ஆனால் பத்துமலையில் வள்ளுவர் கோட்டம் எனும் குகையும் உள்ளது. இதைப் பற்றி பலருக்கு தெரியாது.உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றான திருக்குறளில் கூறப்படும் நெறிகளையும் விளக்கங்களையும் ஓவியங்களாகவும் சிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டு இந்தக் குகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்தின் குகையின் நடுநாயகமாக 5 அடி உயரக் கருங்கல் வள்ளுவர் சிலை 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றிலும் 1330 குறட்பாக்களும் 133 பளிங்குக் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அதிகாரத்துக்கும் சிலைவடிவில் சிறப்பு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன பத்து மலை வள்ளுவர் கோட்டம்” பத்து மலை வள்ளுவர் கோட்டம் ஆண்டுகளுக்கு முன்னர் அருளப்பட்ட திருக்குறளைப் படித்து உணர்வது மட்டுமின்றி, அதன் சிறப்புகளை அறிந்து கொள்வதற்கும், வள்ளுவர் கோட்டம் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. நித்திசுசெந்தூர், சிங்கப்பூர்
அயலக தமிழர்கள்
அயலக தமிழ்செய்திகள்
தமிழர் பெருமை
தமிழர் வரலாறு
தமிழ்
திருக்குறள்